அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையலான சந்திப்பு...
அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையலான சந்திப்பு...
மூன்று அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜூன் 11 கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, அதிபர் பணியில் நிலவுகின்ற சம்பள வேறுபாடுகள், பதவியுயர்வு மற்றும் அதிபர் பணிக்கு தொடர்புடைய பிற சிக்கல்கள் குறித்த விடயங்கள் கல்வி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.
சிக்கல்களை ஆராய்ந்து, ஏற்புடைய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வழங்குமாறு கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு அமைச்சர் ஹரிணி அமரசூரிய பணித்தார்.
இந்த சந்திப்பில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.