Breaking News

போலீசார் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மன்னார் நிருபர்

 போலீசார் ஊடகவியலாளர் மீது தாக்குதல் 






மன்னார் அடம்பன் போலீசார் ஈச்சளவக்கை பெரியமடு பகுதியில் இன்று 31.05.2024 மாலை 3:30 மணியளவில் பெரியமடு பள்ளமடு வீதியூடாக சுயாதீன ஊடகவியலாளன் ராயூகரன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஈச்சளவக்கை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வீதியில் அடம்பன் போலீசாரின் முச்சக்கர வண்டியை நிறுத்தி ஈச்சளவக்கையில் சட்டவிரோத கசிப்பு உற்ப்பத்தியில் ஈடுபடும் விக்டர் மேவின் என்பவரிடம் பணமாக இருக்க வேண்டும் கொடுத்ததை பார்த்த ஊடகவியலாளர் பார்த்தவுடன் தனது தொலை பேசியை எடுத்து கானொலி எடுத்தார் பின்னர் ஊடகவியலாளர் முச்சக்கரவண்டி கடந்து சென்ற பிறகு கசிப்பு உற்ப்பத்தியாளரை அனுப்பி விட்டு முச்சக்கர வண்டியை முன்பக்கம் நிருத்தி தொலைபேசியை எடுக்கும் படி கூறியுள்ளனர் ஏன் என கேட்டதற்கு ஏன் எங்களை படம் எடுத்த நீ என தொலைபேசியை பறித்து அதில் உள்ள கானொலியை அழிக்கசொல்லி அழித்து விட்டு ஜெயக்கொடி எனும் போலீஸ் உத்தியோகத்தர் பின்னர் தகாத வார்த்தையால் ஏசி உன்னை உள்ள வைப்பேன் என கூறி நெஞ்சை பிடித்து தள்ளி தசங்க எனும் தசாங்கன் 6597 போலீசார் அடித்துள்ளார் அடித்து விட்டு நீ கதைக்காம போய் விடு போனால் உனக்கும் உன் உடம்புக்கும் நல்லது என கூறி அனுப்பியுள்ளார்  


குறித்த தசங்க எனும் தமிழ் போலீசார் நீண்டகாலம் சட்டவிரோத கும்பலிடம் பணம் வாங்கி வருவதுடன் நீதிமன்றத்திற்கு போகின்ற இப்பகுதி வழக்குகளையும் லஞ்சம் வாங்கி கதைத்து பிணை வழங்குவதாக பல குற்றசாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது