Breaking News

ஊடகவியலாளரின் உந்துருளி தாக்கப்பட்டமைக்கு சமாதானத்திற்கான இளைஞர் பேரவை கண்டனம்

 ஊடகவியலாளரின் உந்துருளி தாக்கப்பட்டமைக்கு சமாதானத்திற்கான இளைஞர் பேரவை கண்டனம்




வடமராட்சி உடுத்துறை பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்சின் உந்துருளி கடந்த 23ம் திகதி தாக்கப்பட்டமைக்கு சமாதானத்திற்கான இளைஞர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது


ஊடகவியலாளர்களின் அடக்குமுறைகள் தொடர்பானதென தலைப்பிட்டு ஊடக தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு,சர்வேச பத்திரிகையாளர் கூட்டமைப்பிற்கு கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,


அக்கடிதத்தில்,யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறைப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியாளர் மரியசீலன் திலைக்சன் என்பவருடைய மோட்டார் சைக்கிள் இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவமானது மனவருத்தத்திற்குரியதாகும். 


இவ்வாறான ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இதனால் ஊடக சுதந்திரம் முடக்கப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் தங்களுடைய செயற்பாடுகளில் முழு சுதந்திரமாக ஈடுபட முடியாதுள்ளது. இனிவரும் காலங்களிலாவது ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.


ஊடக அடக்குமுறைகளுக்கு எதிரான உங்கள் செயற்பாடுகள் மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம் எ

ன்றுள்ளது