Breaking News

3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு.!

 3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு.!



புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நேற்று (24) நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 


இது தொடர்பான அதிகாரப்பூர்வ விழா நேற்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இது அலரி மாளிகை வளாகத்தில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.


நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தாதியர் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை , அத்துடன் தாதியர் சேவையில் உள்ள 79 சிறப்பு தர அதிகாரிகளும் ஒரே நேரத்தில் பதவி உயர்வும் வழங்கிவைக்கப்பட்டன .


இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் அதிகாரிகள் குழுவும் பங்கேற்றனர்.