Breaking News

முன்னாள் அமைச்சர் #மஹிந்தானந்தவுக்கு 10 வருட கடூழிய சிறை விதிப்பு...!

 முன்னாள் அமைச்சர் #மஹிந்தானந்தவுக்கு 10 வருட கடூழிய சிறை விதிப்பு...!



முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீதான விசாரணையின் போது ஊழல்,மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 10 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.


2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நிறுவனம் ஒன்றின் மூலம் 14000 கரம்போர்ட் மற்றும் 11000 டாம்போட் வாங்கி விளையாட்டு கழகங்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட முன்னாள் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ச.தொ.ச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் ருவாஞ்சீவ் பெர்னாண்டோ ஆகியோர் அந்த குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அதன்படி, முன்னாள் வர்த்தக அமைச்சர் திரு.நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகேவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.