Breaking News

தவறி விழுந்த பயணியையும் கூட வந்த நபரையும் நடு ரோட்டில் விட்டுவிட்டு வந்த அரசாங்கத்திற்கு சொந்தமான பேருந்து


தவறி விழுந்த பயணியையும் கூட வந்த நபரையும் நடு ரோட்டில் விட்டுவிட்டு வந்த அரசாங்கத்திற்கு சொந்தமான பேருந்து 



நேற்றைய (28) தினம் இரவு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேருந்து ஒன்று வந்தத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது 


இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது..


குறித்த பேருந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்தனர் இரு நண்பர்களும் பயணத்தை மேற்கொண்ட போது இரு நண்பர்களில் ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேறு காரணத்தாலோ கீழே விழுந்து உள்ளார் அதனை அவதானித்த கூட வந்த நண்பர் பேரூந்தை நிருத்தும் மாறு சத்தம் எழுப்பியுள்ளார் 


கூட வந்த நண்பரின் சத்தத்தால் பேரூந்தில் இருந்த பயணிகள் தூக்கத்தால் எழும்பியும் நடத்துனர் காதில் அந்த சத்தம் விழவில்லையாம் 


பின் பயணிகளின் சொந்தரவால் நடத்துனர் நண்பரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்தை சுமார் 1kmக்கு தூரத்திற்கு அப்பால் பேரூந்தை நிருத்தியுள்ளார் பின் சிறிது நேரத்தின் பின் காலை 1:30மணி போல் விழுந்த நபரையும் அவரின் நண்பரையும் இடையிலே விட்டுவிட்டு பேரூந்து புறப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக கூட வந்த பயணிகள் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்லுமாறு சாரதியையும் நடத்துனரையும் கேட்ட போது அவர்கள் பயணிகளின் கருத்துக்கு இடமளிக்க வில்லை 


மேலும் குறித்த பேரூந்து யாழ்ப்பாணம் கொழும்பு என அடையாள படுத்தி

இருந்தும் ஆனால் வவுனியா மட்டும் தான் சென்றுள்ளது இவ்வாறான குழப்பத்தால் பயணிகள் மிகவும் சிரமப்படடுகின்றனர் 

மற்றும் பேரூந்தில் வந்த சாரதிக்கும் நடத்துனர்க்கும் தமிழ் மொழி தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்