Breaking News

மருதங்கேணியில் வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதியால் பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள்,மாணவர்கள்

 மருதங்கேணியில் வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதியால் பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள்,மாணவர்கள்



யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள்,மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது 


இன்று(4) காலை 07.00 மணியளவில் மருதங்கேணி தெற்கு பகுதியூடாக பாடசாலை செல்லும் மாணவர்கள்,ஆசிரியர்களை ஏற்றும் பேரூந்தானது பயணித்தது.


மருதங்கேணி பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மாடி வீட்டிற்கு ஓடுகளை இறக்குவதற்காக லொறி ஒன்று வீதியை மறித்து நிறுத்தப்பட்டது 


இதனால் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்கள் குறித்த பகுதியால் பயணிக்க முடியாத சூழ் நிலை உருவானது.உடனடியாக லொறியை அப்புறப்படுத்துமாறு சாரதிக்கு கூறிய போதும் அவர் அதனை அகற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் 


இதனால் மாணவர்கள்,ஆசிரியர்களை ஏற்ற முடியாமல் பேரூந்தானது மாற்று வழியால் திரும்பிச் சென்றதுடன் ஆசிரியர்கள்,மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது 


தூர பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் குறித்த லொறி சாரதியின் நடவடிக்கையால் பேரூந்து இன்றி பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.