யாழில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்..!
யாழில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்..!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இன்று(26) காலை நடைபெற்றது.
தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.