Breaking News

இரு நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் கேபிள் TV உரிமையாளர்களும் மக்களும் பாதிப்பு.

 இரு நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் கேபிள் TV உரிமையாளர்களும் மக்களும் பாதிப்பு.




இரு நிறுவனங்களின் சுயநலன்களால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள "கேபிள்" தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் தமக்கான நீதியை தாமதமின்றி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய

அகில இலங்கை கேபிள் TV ஒப்பிரேற்றர் சங்க பிரதிநிதிகள் மேலும் கூறுகையில் - 


சுமார் இரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் குறித்த சேவையை " கேபிள் TV லிங் ஒப்பரேற்றர்கள் என்ற நிலையில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.


குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 லிங் ஒப்பரேற்றர்களும் 

மலையகத்தில் 54 லிங் ஒப்பரேற்றர்களும் உள்ளடங்கலாக 300 இக்கும் அதிகமானவர்கள் இந்த சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.


ஆனால் இலங்கையில் இரு நிறுவனங்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அதற்கான உரிமங்கள் வழங்கப்படவில்லை.


ஆனால் நாம் தேசிய தொடற்றொடர்பு ஆணைக்குளுவிடம் எமது விண்ணப்பங்களை கொடுத்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.


குறிப்பாக 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை அனுமதிக்காக பெற்றுக்கொண்ட தொடற்றொடர்பு ஆணைக்குழு அனுமதிக்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தும் குறித்த இரு நிறுவனங்களின் அழுத்தங்களால் தடுக்கப்பட்டுள்ளது.


நாம் இந்த சேவையை முன்னெடுக்க பல கோடிகளை முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது தொழிலும் இல்லை முதலும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


எனவே குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள எமது சேவையை மீட்டு எமக்கான நீதியை பெற்றுத்தர உரிய தப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்