புத்தளம் கொலை தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது....!
புத்தளம் கொலை தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது....!
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கொன்று வாகனத்தைக் கொள்ளையடித்ததாக 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர்.
புத்தளம், திலடியா–ரத்மலையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை, புத்தளம் அடபனவில்லு பகுதியில் உள்ள வடிகாலில் ஒரு சடலம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதில் உயிரிழந்தவர் 75 வயதுடைய அப்துல் லத்தீப் என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த 21ஆம் திகதி அவர் தனது முச்சக்கர வண்டியில் வாடகை பயணத்திற்கு சென்றிருந்தார். அன்றைய இரவு சுமார் 9.30 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்பிய இந்த சந்தேகநபருடன், உயிரிழந்தவர் தொடர்புடைய வாடகை பயணத்தில் ஈடுபட்டிருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்கும் நோக்கில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் சாரதியின் கழுத்தில் தாக்கி கொலை செய்த பின்னர், உடலை பின்னால் விட்டுவிட்டு வாகனத்தைக் திருடி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், புத்தளம் முல்லை குடியிருப்பு வளாகத்தில் உள்ள தேவாலயம் அருகே முச்சக்கர வண்டி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
போதைப்பொருள் மற்றும் பணத்திற்கான தேவையினால் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
