ஏறாவூரில் தேர்தல் சட்டங்களை மீறியதாக 3 முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கைது!
ஏறாவூரில் தேர்தல் சட்டங்களை மீறியதாக 3 முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கைது!
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 151 சுவரொட்டிகள் பொலிஸாராால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பிரசேத்தில் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்றைய தினம் அதிகாலையில் பொலிஸார் குறித்த பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த 3 பேரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.