Breaking News

ஈத் அல்-பித்ருக்கான பிறை காணும் பணி தொடங்கியது

 ஈத் அல்-பித்ருக்கான பிறை காணும் பணி தொடங்கியது



இன்று, சவூதி அரேபிய இராச்சியம் முழுவதும் உள்ள பிறை காணும் குழுக்கள், ஈத் அல்-பித்ரின் தொடக்கத்தை நிர்ணயிக்கும் ஷவ்வால் மாத தலைப்பிறையைக் காண்பதற்காக வானத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.


புனித ரமலான் மாதம் நிறைவடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக, வானியல் ஆய்வகங்களும் குழுக்களும் இன்று மாலை அடிவானத்தை கவனமாகக் கண்காணித்து வருகின்றன.


இந்த நிலையில் அல்லாஹ் நமது நோன்பையும், தொழுகையையும், நற்செயல்களையும் ஏற்றுக்கொள்வானாக...