Breaking News

பளையினை சேர்ந்த நபர் ஒருவர் எனது கணவனை கொலை செய்ய முயற்சி' எமக்கு நடந்த அநீதிக்கு நீதி வேண்டும் மனைவி வேண்டுகோள்......!

 பூ.லின்ரன்

செய்தியாளர் (சர்வதேச ஊடகவியலாளர்)



'பளையினை சேர்ந்த நபர் ஒருவர் எனது கணவனை கொலை செய்ய முயற்சி' எமக்கு நடந்த அநீதிக்கு நீதி வேண்டும் மனைவி வேண்டுகோள்......!




கடந்த 19 ம் திகதி பிற்பகல் செம்பியன் பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தானது பளையினை சேர்ந்த நபரால் திட்டம் இட்டு கொலை செய்யும் எண்ணத்துடனே மேற்கொள்ள பட்டது இதற்கு எமக்கு நீதி வேண்டும் என குடும்ப பெண் கோரியுள்ளார் 



இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


கடந்த 19 ம் திகதி செம்பியன் பற்று வடக்கு கடற்கரை பகுதிக்கு எனது கணவன் சென்று இருந்தார் சிறிது நேரம் கழித்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது அதில் எனது கணவன் பாரியளவு விபத்துக்கு உள்ளாகி உள்ளார் என்று தெரியவந்தது உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு எனது பிள்ளை சென்றார் 


விபத்து ஏற்பட்ட இடத்தில் எனது கணவனை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் எனது மகளை கடினமான வார்த்தைகளால் பேசிவிட்டு அப்பாக்கு பெரியளவில் விபத்து இல்லை என கூறி அந்த இடத்தினை விட்டு விரட்டினார் 


பின்னர் எனது கணவனுடன் விபத்துக்கு உள்ளான நபரை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் தமது காரில் எற்றி சென்று விட்டு எனது கணவனை நடு வீதியில் விட்டு விட்டு சென்றனர் 


சுமார் அரை மணி நேரத்திற்கு பின் எனது கணவனின் அண்ணனுடன் எனது கணவனை சிகிச்சைக்காக வைத்திய சாலை அழைத்து சென்றேன் 


அதன் பின்னரே எனது கணவன் கண் முழிச்சு எனக்கு கூறினார் நான் விபத்துக்கு உள்ளான போது எனது காலில் சிறியளவு காயம் மாத்திரமே இருந்து பின்னர் சிறிது சூரத்திற்கு அப்பால் காரில் வந்த பளையினை சேர்ந்த நபர் எனது காயப்பட்ட காலிற்கு மேல் பல தடவை காரால் ஏற்றினார் என எனக்கு கூறினார் 



இதற்கு பின்னரே எனக்கு தெரியும் இச் சம்பவம் எனது கணவனை கொலை செய்வதற்காக திண்டம்மிட்டு நடத்தப்பட்டது என தெரிய வந்தது அதன் பின்னரே என் கணவனுடன் விபத்துக்கு உள்ளான நபரை பார்த்த போது அவர் பல தடவை எனது வீட்டுக்கு முன்னால் விபத்து நடைபெற்ற நாள் சென்றார் என தெரிய வந்தது 


இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய சென்ற போது அவர்கள் எந்த விதமான முறைப்பாடுகளும் என்னிடம் பதிவு செய்ய வில்லை மற்றும் நேற்றைய தினம் (23) எனது கணவனிடன் பொலிஸ் வாக்கு மூலம் எடுக்க சென்ற போது பொலிசார் சுயாதீனமாகவே வாக்குமூலம் எடுத்ததோடு எனது கணவனின் எந்த விதமான முறைப்பாடுகளையும் பதிவு செய்யவில்லை 


மற்றும் எனது கணவனை தினமும் கொலைசெய்ய முயன்ற பளையினை சேர்ந்த நபர் பார்வை யிட சென்று பலத்த தொனியில் மிரட்டுவது மற்றும் எனது உறவினர்களை வெட்டுவன் என கூறி சென்றுள்ளார் இதற்கான ஆதாரங்களும் எம்முடம் உள்ளன 


விபத்து இடம்பெற்றது இது வரை நான் எனது இரு பெண் பிள்ளைகள் வீடு போக வில்லை மற்றும் எனது பிள்ளைகள் பாடசாலை செல்ல வில்லை எமக்கு இந்த நபரால் பயமாக உள்ளது இந்த கொலைகார நபர் பல பாரியளவான குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார் இவருக்கு பளை பொலிஸ் தமது முழுமையான ஆதரவை வழங்கிய வருகிறது என குடும்ப பெண் தெரிவித்துள்ளார்.