Breaking News

கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! எரிந்து சாம்பலாகிய மோட்டார் சைக்கிள்

 கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..!

எரிந்து சாம்பலாகிய மோட்டார் சைக்கிள் 



திருகோணமலையில் இருந்து கபரணை நோக்கி வெளிநாட்டவர் பயணித்த கார் ரக வாகனமும் கபரணையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த உயர் ரக மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி வபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (23) மாலை கபரணை வீதியில் கித்துலூத்து 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


விபத்துக்குள்ளான காரில் இந்தியாவில் வருகைதந்த கணவன், மனைவி ஆகியோரே பயணித்துள்ளதாகவும் கணவன் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மனைவி விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி துண்டு துண்டாக சிதறி எரிந்து நாசகாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 21 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்லோயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.