Breaking News

கரவெட்டியில் இடம்பெற்ற மாபெரும் பன விதை நடுகை......!

 பூ.லின்ரன்

செய்தியாளர் (சர்வதேச ஊடகவியலாளர்)


கரவெட்டியில் இடம்பெற்ற மாபெரும் பன விதை நடுகை......!



இன்றைய தினம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் கரவெட்டி கிழக்கு j.368 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கரவெட்டி பிரதேச செயலாளகத்தால் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பன விதை நடும் நிகழ்வு சமர்தாய பூர்வமாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் ஆரம்பமானது 



இவ் நிகழ்வானது 30 000 பன மரங்களை உருவாக்கும் நோக்குடன் அண்மையில் அமரத்துவம் அடைந்த சமூகசேவையாளர் கணபதிப்பிள்ளை கந்தையா {கப்பூது ஐயா} ஞாபகார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் 


இவ் பன விதை நடுகை நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் திரு ஜெயானந்தம் ஜெகோபி மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அகஸ்ரின்மற்றும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெ கலைச்செல்வி மற்றும் ஜனநாயகபோராளிகள் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்