Breaking News

ஞானச்சுடர் 329 ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..!


ஞானச்சுடர் 329 ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் ஆன்மீக சஞ்சிகை 329 வது இதழ் வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது.

இதில் வெளியீட்டுரையினை

திருமதி அமுதகலா சுதர்சன் நிகழ்த்தினார். 

மதிப்பீட்டுரையினை 

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் துரை.கணேசமூர்த்தி நிகழ்த்தினார். 


தொடர்ந்து ஏழாலை மத்தி, ஏழாலை பகுதியை சேர்ந்த மகாஜானக் கல்லூரியல் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அவரது கல்வி நடவடிக்கைக்காக துவிச்சக்கர வண்டி ஒன்றும், பாற்பண்ணை திருநெல்வேலியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கும் அவரது வாழ்வாதார நடவடிக்கைக்காக ஒரு துவிச்சக்கர வண்டியொன்றும் வழங்கிவைக்கப்பட்டன.

இதே வேளை கொக்குவில் மேற்கு கொக்குவிலை சேர்ந்த பெற்றோர்களை இழந்தவர்க்கு வீடு திருத்த பணிக்காக ரூபா 25,000 நிதியும்ந வழங்கப்பட்டதுடன் காக்கைதீவு சிவசக்தி அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களிற்கான ரூபா 50,000 நிதியும், சங்கானை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,

நரம்பியல் புனருத்தாபன பிரிவுக்குரிய பக்கவாத நோயாளிகளுக்கான சிகிச்சை இயன் மருத்துவருக்கு வேதனம் வழங்குவதற்கு ரூபா 70,000 மாதந்த நிதியும் வழங்கிவைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் செஞ்சொற் செல்வர் இரா. செல்வவடிவேல் அவர்களது மகாபாரத சொற்றொடர் இடம் பெற்றது.


மேலும் கடந்ய 28/05/2025 அன்று கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் அடியவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து உலருணவு பொருட்களான பிஸ்கற்வகை வழங்கிவைக்கப்பட்டன.