Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து விபத்து..!

 பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து விபத்து..!



தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து, சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


நேற்று(29.03.2026) இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே மகிழுந்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த விபத்தினால் மகிழுந்து மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. 


எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 


சம்பவம் தொடர்பில் சிலாபம் காால்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.