Breaking News

தும்பளை மேற்கு விவேகானந்தா சனசமூக நிலையத்தின் 77வது ஆண்டு விழா..!

 தும்பளை மேற்கு விவேகானந்தா சனசமூக நிலையத்தின் 77வது ஆண்டு விழா..!



தும்பளை மேற்கு விவேகானந்தா சனசமூக நிலையத்தின் 77வது ஆண்டு விழாவை முன்னிட்டு தும்பளை விவேகானந்தா விளையாட்டுக் கழகம், தும்பளை மேற்கு சனசமூக நிலையத்துடன் இணைந்து நடாத்தும்

ஊரக விளையாட்டு விழா நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் கழக மைதானத்தில் கழக தலைவர் முத்துக்கிருஷ்ணன் காண்டீபன் தலைமையில் 

இடம்பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏர்றப்பட்டு நிழ்வுகள் ஆரம்பமாகின.


இதில் கருத்துரையை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி நாகலிங்கம் சிவபாலன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தும்பளை மேற்கு சன சமூக நிலைய தலைவர் நாகலிங்கம் வரதராசா ஆகியோர் நிகழ்த்தியதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் பதக்கங்கள் சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம சிறப்பு விருந்திரனர், கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌராவித்தனர்.


இந் நிகழ்வில் 

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி நாகலிங்கம் சிவபாலன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தும்பளை மேற்கு சன சமூக நிலைய தலைவர் நாகலிங்கம் வரதராசா பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், பருத்தித்துறை நகரசபை உப தவிசாளர், தேவராஜேந்திரம், தும்பளை மேற்கு விவேகானந்தா சன சமூக நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், விளையாட்டு கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.