Breaking News

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

 கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று(23) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.


குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.


இதையடுத்து, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் ஹாலோட்ரஸ்ட் மைன் ஆக்ஷன் சர்விஸ் மற்றும் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.


இது தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.