வெதுப்பக பொருட்களுடன் சென்ற முச்சக்கரவண்டி விபத்து; இருவர் மருத்துவமனையில்..!
வெதுப்பக பொருட்களுடன் சென்ற முச்சக்கரவண்டி விபத்து; இருவர் மருத்துவமனையில்..!
திருகோணமலை பொது வைத்தியசா
லைக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை வெதுப்பக உற்பத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காலை நேர வியாபாரத்திற்காகச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை போக்குவரத்துப் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
