ஈ.பி.டி.பி யிடம் சரணாகதி அடைந்த தமிழரசு கட்சி..!
ஈ.பி.டி.பி யிடம் சரணாகதி அடைந்த தமிழரசு கட்சி..!
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும். - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்த திரு. சிவஞானம் அவர்கள், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.