கற்கோவளத்தில் தீப்பரம்பல், கடும் முயற்சியால் கட்டுப்பாட்டில்...!
கற்கோவளத்தில் தீப்பரம்பல், கடும் முயற்சியால் கட்டுப்பாட்டில்...!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று இரவு சம்பு புற்களுக்கு தீவைக்கப்பட்டமையால் அப்பகுதியில் கடுமையான தீப்பரவல் ஏற்பட்டது. கடும் தீ காரணமாக கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கடற்றொழில் உபகரணங்கள் பல தீயில் ஏரியக்கூடிய நிலையில் விரைந்து செயற்பட்ட பிரதேச மக்கள் மற்றும் பருத்தித்துறை போலீசார் தண்ணீர் கொண்டு தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டும் அது கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. உடனடியாக செயற்பட்ட பருத்தித்துறை போலீசார் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தீப்பரம்பலை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 7:00 மணியிலிருந்து இரவு 10:30 மணிவரை இடம் பெற்றுள்ளது.
இதேவேளை தீ கடுமையாக பரவிக்கொண்டிருந்த நிலையில் கிராம மக்களால் தீயால் எரிந்து நாசமாகக்கூடிய மீன்பிடி படகுகள், மற்றும் வலைகள் உட்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி பாதுகாத்துக்கொண்டனர்.
குறித்த தீ கட்டுப்பாட்டு நடவடிக்கையில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான போலீசார், இராணுவம் என பலரும் ஈடுப்ட்ட
னர்.