கிளிநொச்சி உமையாள் புரத்தில் அரச பேரூந்து மற்றும் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து....!
கிளிநொச்சி உமையாள் புரத்தில் அரச பேரூந்து மற்றும் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து....!
கிளிநொச்சி உமையாள் புரத்தில் கொழும்பில் இருந்து வந்த அரச பேரூந்து மற்றும் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி
விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வந்த அரச பேரூந்தானது கிளிநொச்சி உமையாள் புரத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது
இவ் விபத்தின் போது பேரூந்து மற்றும் வாகனத்தில் வந்த நபர்களுக்கும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை வாகனம் மட்டும் பாரியளவு சேலத்திற்கு உள்ளாகியுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்