Breaking News

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி மணல்காடு இணைப்பு வீதியை புன்னரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி மணல்காடு இணைப்பு வீதியை புன்னரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மணல்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையே யான சுமார் 500 மீற்றர் விதி பல ஆண்டுகளாக புன்னராமைக்கப் படமையால் பொற்பதி மற்றும் மணல் காடு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பொற்பதி மற்றும் மணல்காடு கிராமங்கள் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் 500மீற்றர் வீதி சீரின்மை காரணமாக சுமார் 8 km தூரம் சுற்றி சென்று வருகின்றனர்.

மேலும் பொற்பதி ரோமன் காத்தோலிக்க பாடசாலையில் தரம் 9 வரையே வகுப்புக்கள் நடைபெறுகின்றன. மணல்காடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த. உயர் தரம் வரை வகுப்பு க்கள் இடம் பெறுகின்றன. பொற்பதி பாடசாலையில் கற்கின்ற மாணவர்கள் 10, 11, மற்றும் உயர் தரங்களில் கற்க வேண்டிய மாணவர்கள் பருத்திதுறைக்கு சுமார் 12 km தூரம் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறாக குறித்த பொற்பதி மணல்காடு மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இதனால் உரியவர்கள் கவனமெடுத்து வீதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை வீட்டுக்கின்றனர்.