Breaking News

தையிட்டியில் பொலீசாரால் ஐவர் கைது

 தையிட்டியில் பொலீசாரால் ஐவர் கைது



யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்றையதினம் சட்டவிரோத விகாரையென வலி வடக்கு பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டச்சென்ற வேளை பொலிஸாருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டவேளை பொலீஸாரால் வேலன் சுவாமி , வலி கிழக்கு தவிசாளர் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும்வரை அகன்று செல்லமாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகொன்றனர்