போதைப்பொருட்களை கை மாற்றும் இடமாக மாறும் பச்சிளைப்பள்ளி பிரதேசம் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் குற்றச்சாட்டு......!
பூலின்ரன்.
செய்தியாளர்
போதைப்பொருட்களை கை மாற்றும் இடமாக மாறும் பச்சிளைப்பள்ளி பிரதேசம் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் குற்றச்சாட்டு......!
பச்சிளைப்பள்ளி பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வழங்கையில் தற்போது பச்சிளைப்பள்ளி பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகம் இடம் பெற்று வருவதாகவும் அதனை கட்டுபடுத்த முடியாமல் உள்ளதாகவும் இதற்கு முழுமையான காரணமாக இருக்கும் பொலிசார் பச்சிளைப்பள்ளி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுடன் பச்சிளைப்பள்ளி பொலிசார் நல்ல உறவு முறையில் உள்ளனர் என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அண்மை காலங்களில் சட்ட விரோதமான மணல் அகழ்வு அதிகம் இடம் பெற்று வருகின்றன இவ் பிரதேசத்தில் மட்டுமன்றி வடக்கில் பல பிரதேசங்களில் மணல் அகழ்வு நடவெடிக்கைகள் மிகவும் மோசமாக நடைபெருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது
இதன் அடிப்படையில் நாட்டில் உள்ள பொலிஸ்மா அதிபருக்கு தவிசாளர் கடிதம் ஒன்று எழுதி உள்ளதாகவும் அதில் பச்சிளைப்பள்ளி பொலிசாரின் நடவெடிக்கைகள் திருப்பி கரமாக இல்லை என்றும் ஏனெனில் நாளுக்கு நாள் சட்ட விரோதமான செயற்பாடுகள் கூடிட்டு செல்வதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு விசேட ஏற்பாடு ஒன்று செய்யும் மாறு ஆனாலும் பொலிஸ் மா அதிபர் இதற்கான எந்த விதமான நடவெடிக்கையும் எடுக்க வில்லை எனவும் கூறியுள்ளார்
மற்றும் பச்சிளைப்பள்ளி பள்ளி பிரதேசத்தில் சட்ட விரோதமான மணல் அகழ்வு செயற்பாடு மட்டுமின்றி இன்னொரு புறம் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகளும் இடம் பெறுவதாகவும் அவ் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் பளை பொலிஸார் நல்ல உறவு முறையில் உள்ளனர் எனவும்
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இருந்து வரும் போதைப்பொருட்களை கை மாற்றும் இடமாக பச்சிளைப்பள்ளி பிரதேசம் காணப்படுவதாகவும் எதிர் காலத்தில் இதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் தமது சட்ட விரோத கும்பலுடன் இருக்கும் உறவு முறையினை தவிர்து இவ் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த நடவெடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் போதையற்ற நாட்டினை கட்டி எழுப்ப முடியும் என கூறியுள்ளார்
மற்றும் அண்மை காலங்களில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பொலிசாரின் நடவெடிக்கைகலால் மணலை ஏற்றிக்கொண்டு செல்லும் போது வீதி ஓரங்களில் மணல்களை கொட்டி விட்டு செல்கின்றனர் இதனால் பாரியளவு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த விடயத்தையும் பொலிசார் எதிர் காலத்தில் மிக பொருப்போடு முன்னெடுத்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கும் போது தாம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.
