அமைச்சரின் நித்திரையும் மன்னார் மக்களின் ஆட்சேபனையும்..!
அமைச்சரின் நித்திரையும் மன்னார் மக்களின் ஆட்சேபனையும்..!
மன்னார் நகரப் பகுதிக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பில் மன்னாரில் நேற்றையதினம் (07.06.2025) நடைபெற்ற கலந்துரையாடலில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு மன்னார் மக்கள் கடுமையான ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளையும் முன் வைத்திருந்தார்கள் அமைச்சர் மக்களது கருத்துக்களை பொருட்படுத்தவே இல்லை அவர் அதிக நேரம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். மக்களின் உணர்வுகளை இந்த அரசும் கிஞ்சித்தும் புரிந்து கொள்ளவதாகத் தெரியவில்லை.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஜனநாயக கருத்துக்களுக்கு மதிப்பளித்து மக்களின் விருப்போடு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தேர்தல் மேடைகளில் உரத்துப் பேசிய ஜேவிபி சித்தாந்தத்தில் வந்த என் பி பி என்னும் முகமூடிகளின் உண்மை தோற்றம் அதிகாரம் கிடைத்த உடனே சுயம் வெளிப்படுகின்றது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.